Category Archives: அப்பா

புது நெல்லின் பால்மணம் வீசும் புதிய வரவு

நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் கிளைகள் பரப்பி, மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் காலம். ஒவ்வொரு மலரும் ஒவ்வொருவிதமாகப் பூத்துக் கொண்டிருக்கிறது. சிறார்களுக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் விரும்பும் வகையில் கதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போல வயது வாரியாகவும் சிறார் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி, போன்ற நூல்களின் … Continue reading

Posted in அப்பா, இலக்கியம், குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், நாவல் | Leave a comment

அவசரக் கோலம், அள்ளித் தெளிச்சேன்

ஒரு ராஜா நகர்வலம் போகும் போது ஒரு வீட்டு வாசலில் ரொம்ப அழகான கோலம் ஒன்றை பார்த்தான். ஆஹா, இவ்ளோ அற்புதமான கோலத்தை யார் போட்டதுன்னு கேட்டவனுக்கு ஒரு பாட்டிய கூட்டிட்டு வந்து காமிச்சாங்க. அம்மா, ரொம்ப அற்புதமா கோலம் போட்ருக்கீங்கன்னு ராஜா பாராட்டினான். பாட்டிம்மா சந்தோஷம் மகாராஜான்னாங்க. இளவரசிக்கு கல்யாணத்துக்கு பாத்துட்டிருக்கோம். அவ கல்யாணப் … Continue reading

Posted in அனுபவம், அப்பா, கட்டுரை | Tagged , , | Leave a comment

வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி

ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகை முழுமையும் போட்டு ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கினார் அப்பா. உடைமையாளர்கள் தவிர குத்தகைதாரரிடமும் முறைப்படி பணம் தந்து, பதிவும் செய்து முடித்திருந்தார். நடுவில் எப்போதோ சில வருடங்கள் உள்குத்தகைக்கு எடுத்த ஒருவர் சட்டென்று இடையில் புகுந்து அந்த நிலத்தின் குத்தகைதாரர் நான்தான், என்னிடம் தெரிவிக்காமல் நடந்திருக்கும் விற்பனை செல்லாது என்று … Continue reading

Posted in அப்பா, எண்ணம் | Tagged , | Leave a comment

ஆசிரியர் தினம் – 2019

வாழ்வில் வழிகாட்டும் நல்லாசிரியர்கள் அமைவது ஒரு வரம். வாழ்வெங்கும் ஆசிரியர்கள் உடன் வருவது நல்லூழ். நினைவு தெரிந்த நாள் முதல் எப்போதும் என்னை வழிநடத்திய அப்பா தொழில்முறையிலும் ஒரு ஆசிரியர். தனது மாணவர்களுக்கும், எனக்கும் எப்போதும் எல்லாவற்றையும் கதைகள் மூலமும், பாடல்கள் மூலமுமே கற்பித்துக் கொண்டிருந்த ஞானகுரு என் அப்பா. இன்றைய என் தமிழார்வம், வாசிப்பு … Continue reading

Posted in அனுபவம், அப்பா, எண்ணம் | Tagged , , | 1 Comment

அன்பு மிகவுமுடையான்

கண்ணனைக் குழந்தையாக கண்டு பாடிய பெரியாழ்வார் அவனைத் தன் மாப்பிள்ளையாகக் கொண்டு பாடிய பாடல்களும் உண்டு. அதில் எனக்குப் பிடித்த பாடல் இது. குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ நடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோ பன்மகன் கண்ணன் இடையிரு பாலும்வ ணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி கடைகயி றேபற்றி வாங்கிக் கைதழும் பேறிடுங் … Continue reading

Posted in அனுபவம், அப்பா, மலரும் நினைவுகள், Uncategorized | Tagged , , | Leave a comment