Category Archives: ஆனந்தவல்லி

காவிரி இலக்கியத் திருவிழா உரை – பேசாப் பொருளைப் பேசுதல்

தமிழக அரசின் பொது நூலகத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தஞ்சை மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் சேர்ந்து தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் மார்ச் 18 & 19 தேதிகளில் காவிரி இலக்கியத் திருவிழாவினை சிறப்புற நடத்தினர். அதில் மார்ச் 19ந்தேதி, மதியம் 2 மணி அமர்வில் நான் நிகழ்த்திய உரைக்கென தயாரித்த … Continue reading

Posted in அனுபவம், ஆனந்தவல்லி, இலக்கியம், காவிரி இலக்கியத் திருவிழா 2023, மராட்டிய மன்னர் வரலாறு, மேடை உரை | Tagged , , , , | Leave a comment

புரட்சிக்கில்லை கட்டுசெட்டு…

தமிழில் கதை சொல்லுதல் என்பது ஒரு வாழ்க்கைமுறை, அதன் வழியே சமூக மேம்பாடு குறித்தும் மனித வாழ்வில் இயற்கையில் ஏற்டுகின்ற, ஏற்படுத்தப்படுகின்ற சிடுக்குகள் உள்ளிட்டவைகள் குறித்த அரசியல் ரீதியான பயன்மிகு விவாதத்தைக் கிளப்ப அது உதவுகின்றது என்ற கருத்தாக்கத்தின் மீதான நம்பிக்கை குறையும்போதெல்லாம் நம்மவர்களின் சில படைப்புகள் மற்றும் முயற்சிகள் அந்த நம்பிக்கையை வலுவடையச் செய்துவிடுவது … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், வரலாறு, விமர்சனம் | Leave a comment

உண்மையும் புனைவும் இரண்டறக் கலந்த தருணம் – மதுமிதா

தன்னைப் பெற்ற தந்தை மற்றும் தன் நாட்டை ஆளும் அரசராலேயே கைவிடப்பட்டு, சுரண்டப்படும் வாழ்வை எதிர்கொண்ட ஒரு சிறுமியின் கதை இது. இப்படி ஒரு தந்தை இருக்க முடியுமா என்னும் கசப்பை ஜீரணிக்கமுடியாது. முதல் அத்தியாயத்திலேயே அந்த தந்தையின் குணம் சொல்லப்பட்டு விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய சுயரூபம் இதுதான் என்பதை நம் பார்வையில் திறந்து … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், இலக்கியம், மராட்டிய மன்னர் வரலாறு | Tagged | Leave a comment

ஆனந்தவல்லி – பத்மா அரவிந்தின் பார்வையில்

ஜீவன் உள்ள எழுத்து என்று மாலனும் ஓவ்வொரு பாத்திரமாக சாந்தியும் விவரித்து எழுதியபின் நான் எழுத ஒன்றும் இல்லைதான். ஆனாலும் என்னை வெகுவாக பாதித்திருந்தது ஆனந்தவல்லி. நீண்டநாள் எடுத்துக்கொண்டேன், படித்துமுடிக்க. அவ்வப்போது லஷ்மியுடன் சந்தேகங்கள் வேறு. அதெப்படி பெண்கள் திருமணத்திற்கு வந்திருந்தால், சாதிவிட்டு சாதி கல்யாணம் நடப்பதை கண்டுபிடித்திருப்பார்கள்? அப்படி என்றால், சாதி, சம்பிரதாயம் எல்லாம் … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், மராட்டிய மன்னர் வரலாறு, வரலாறு | Tagged , | Leave a comment

புதுக்கோட்டையில்

புதுக்கோட்டை நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த நாவலுக்கான விருதை ஆனந்தவல்லி பெற்றுள்ளது. வரும் ஞாயிறு அன்று புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது. வார இறுதியில் புதுக்கோட்டையில் இருப்போம். வாய்ப்புள்ள நண்பர்கள் சந்திக்கலாம். #ஆனந்தவல்லி_நாவல் #ஆனந்தவல்லி

Posted in ஆனந்தவல்லி, மராட்டிய மன்னர் வரலாறு | Tagged , | Leave a comment

பொம்மை ராஜாக்களும் உடன்கட்டைப் பெண்களும் – சரவணன் மாணிக்கவாசகம்

ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் : லக்ஷ்மி சென்னையில் பிறந்து, தஞ்சாவூரைச் சேர்ந்த பாபநாசத்தில் வளர்ந்தவர். ஆட்டிசம் குழந்தைகள் வளர்ப்பிற்கான எழுதாப்பயணம் என்ற நூலை எழுதியிருக்கிறார். கல்லூரி காலம் முதலே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவரது முதல் நாவல் இது. ஆய்வுகள் செய்து நூல்களை எழுதுவோர் தமிழில் அரிது. ராஜம் கிருஷ்ணன் போல் வெகுசிலரே நூலுக்காக … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், இலக்கியம் | Tagged , , , , , | 1 Comment

தொடரும் பெண்ணடிமைத்தனம்

நன்றி தமிழ் இந்து. புகைப்பட தந்து உதவிய தோழர் Muthusamy Jeya Prabakarக்கு ஸ்பெஷல் நன்றி. புத்தகக் கண்காட்சியில் F4 அரங்கில் கிடைக்கும். ஆன்லைனில் வாங்க https://thamizhbooks.com/product/anandhavalli/

Posted in ஆனந்தவல்லி | Tagged , | Leave a comment

ஆனந்தவல்லி – வாசிப்பு அனுபவம் – கோவை பிரசன்னா

அடிமை வாணிகம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது அறிவோம். அமெரிக்காவில் இருந்ததைக் கூட கருப்பு அடிமைகளின் கதை வழி அறிவோம். ஆனால் உள்ளூரில், நம் தமிழ் நாட்டிலேயே சிறுமிகள் முதற்கொண்டு அடிமைகளாக விறகப்பட்டார்கள் என்பது இந்த நாவல் மூலம் தெரிகிறது. ஆனந்தவல்லி என்ற இந்த, வரலாற்று உண்மைகளைக் களமாகக் கொண்ட நாவல் லஷ்மி பாலகிருஷ்ணனால் எழுதப்பட்டது. இவர் … Continue reading

Posted in ஆனந்தவல்லி, கட்டுரை, தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், வரலாறு, விமர்சனம் | Tagged , , | Leave a comment

ஆனந்தவல்லி – அகிலா அலெக்சாண்டரின் பார்வையில்

வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வை ஒட்டிய புனைவு. வரலாறு என்றால் நம் பள்ளி கல்லூரி பட புத்தகங்களிலோ அல்லது அரசாங்க தேர்வுகளுக்கு படிக்கும் பாடத்திட்டங்களை ஓட்டிவரும் தரவுகளின் வழியோ நன்கு அறியப்பட்ட நிகழ்வுகளோ, போர்களோ, படைகளோ, நாயகர்களோ இல்லை. சோழர்கள் கொடி கட்டி ஆண்ட தஞ்சைத் தரணியில் சோழர்களுக்குப் பின் வந்த மராத்தியர்களின் ஆட்சி.  பெண்கள் … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், பெண்ணியம், மராட்டிய மன்னர் வரலாறு, வரலாறு | Tagged , , , , | Leave a comment

ஜீவன் உள்ள எழுத்து – மாலன் நாராயணன்

ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் -பாரதி புத்தகாலயம் -தொலைபேசி044-24332424 – விலை ரூ 230 வரலாற்று சாட்சியம்-1 “ ஒரு கிருகஸ்தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆபீசுக்குப் போயிருக்கிறான். அவன் சம்சாரம் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறாள்.அக்கம் பக்கம் யாருமில்லை. ஓர் ஆள் வந்து சீட்டு ஒன்றைக் கொடுத்தானாம். அதில், ’உன் புருஷன் சாகுந் தறுவாயில் … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், மராட்டிய மன்னர் வரலாறு, விமர்சனம் | Tagged , , , , , , , | 1 Comment