Category Archives: கட்டுரை

நீரளவே ஆகுமாம் நீராம்பல்

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு என்கிறது மூதுரை. அறிவு என்பது நாம் வாசிக்கும் நூல்களைப் பொறுத்தது. வயிற்றுப் பசியும், காமப் பசியும் விலங்குகள் எல்லாவற்றிற்கும் பொதுவானவை. மனிதனை விலங்குகளிலிருந்து தனித்துவப்படுத்துவது அறிவுப் பசி ஒன்றுதான். புத்தகங்களே அப்பசிக்கான உணவு. டான் குயிக்ஸாட் போன்ற ஆக்கங்களைத் … Continue reading

Posted in எண்ணம், கட்டுரை, சமூகம் | Tagged | Leave a comment

ஆனந்தவல்லி – வாசிப்பு அனுபவம் – கோவை பிரசன்னா

அடிமை வாணிகம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது அறிவோம். அமெரிக்காவில் இருந்ததைக் கூட கருப்பு அடிமைகளின் கதை வழி அறிவோம். ஆனால் உள்ளூரில், நம் தமிழ் நாட்டிலேயே சிறுமிகள் முதற்கொண்டு அடிமைகளாக விறகப்பட்டார்கள் என்பது இந்த நாவல் மூலம் தெரிகிறது. ஆனந்தவல்லி என்ற இந்த, வரலாற்று உண்மைகளைக் களமாகக் கொண்ட நாவல் லஷ்மி பாலகிருஷ்ணனால் எழுதப்பட்டது. இவர் … Continue reading

Posted in ஆனந்தவல்லி, கட்டுரை, தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், வரலாறு, விமர்சனம் | Tagged , , | Leave a comment

நன்றியோடு நினைவு கூர்வோம்

பழைய கதைகள், படங்களில் எல்லாம் மைனர் என்கிற பொதுப்பெயரில் சில கதாபாத்திரங்கள் உலவுவதை படித்திருப்போம் அல்லது பார்த்திருப்போம். அந்த மைனர்கள் எல்லோருமே மது, மாது ,சூது என சகலவித கெட்ட பழக்கங்களுக்கும் புகலிடமாக மோசமான நடத்தை உள்ளவர்களாக உலாவுவார்கள். உண்மையில் மைனர் என்றால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது பொருள். அந்த வார்த்தை எங்கனம் துர்நடத்தைகளோடு … Continue reading

Posted in அரசியல், எண்ணம், கட்டுரை, Uncategorized | Tagged , , , | Leave a comment

ஜெயமோகனின் 100 கதைகள் – 4

நற்றுணை மற்றும் சிறகு கதைகளில் பெண் கல்விக்குத் தேவைப்படும் ஊன்று கோல்களைப் பற்றி பேசப்படுகிறது. அம்மணி தங்கச்சிக்கு கேசினி என்ற யட்சியின் இருப்பாகிய அகத்துணையும், ஆனந்தவல்லிக்கு சைக்கிள் எனும் வாகனத்தைக் கையாளும் திறன் தரும் புறத்துணையும் கல்வியில், பொருளாதாரத்தில் மேலே செல்ல உதவுகின்றன. தமிழ்ச் சூழலில் யட்சி எனும் தொன்மம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர் … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, ஜெயமோகன் | 3 Comments

ஜெயமோகனின் நூறு கதைகள் – 2

இந்தக் கதைகளின் வரிசையில் முதல் கதையும், கடைசிக் கதையும் தற்கொலை எண்ணத்தை மையப்படுத்தியவை.  கவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு, அரசியல் என பலதளங்களிலும் இயங்கிய எம்.கே எனும் மாமனிதரின் இறப்புக்குப் பின் அவர் கேரள அறிவியக்கத்தில் ஏற்படுத்திய புத்தெழுச்சியைப் பற்றியும், அவரது வாழ்வைப் பற்றியும் சில அறிவுஜீவிகள் கூடிப் பேசிக் கொள்ளும் உரையாடலாக ஆரம்பிக்கிறது அவரது முதல் … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, சிறுகதை, ஜெயமோகன், விமர்சனம் | Tagged , , , | 3 Comments

ஜெயமோகனின் நூறு கதைகள் – 1

கொரோனா காரணமாக எழுந்த ஊரடங்கு உத்தரவும், நோய் குறித்த அச்சமும் ஒரு சாராரை வீட்டுக்குள் முடக்கவும், இன்னொரு பக்கம் மக்களை பசியும் பட்டினியுமாக சாலைகளில் சாரை சாரையாக நடக்கவும் வைத்திருக்கிறது. இதில் வீதியில் விடப்பட்டோரின் வாழ்கை அவர்களின் கையில் இல்லை – அவர்களை நகர்த்திக் கொண்டு போகும் விதியின் வலிய கரங்களே அவர்களை என்ன செய்வதென்பதை … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, ஜெயமோகன் | Tagged , , , , , , | 3 Comments

புத்தியுள்ள மனிதரெல்லாம்

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இவ்வரி பொதுவாக நல்லூழ், இறை ஆசி போன்றவற்றைக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால் மாணவப் பருவத்தில் இவ்வாறு நிகழ்வதற்கான முக்கியமான காரணியாக இருப்பது கற்றல் குறைபாடு. கல்வியில் பின் தங்கியிருக்கும் அனைத்துக் குழந்தைகளும் கற்றல் குறைபாடு உடையவர்கள் அல்ல. நிஜமாகவே நுண்ணறிவுத் திறன்(IQ) குறைவால் கல்வி கற்பதில் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கற்றல் குறைபாடு, குழந்தை வளர்ப்பு, செல்லமே, டிஸ்லெக்சியா | Tagged , , , , , | 3 Comments

லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க

இந்த லாக்டவுனில் எனக்குப் புதிதாக ஆரம்பித்திருக்கும் வியாதி கன்னா பின்னாவென யூட்யூப் வீடியோக்களைப் பார்ப்பது. எந்தச் சேனலும் சீண்டாத பழைய படங்கள்,  புதிதாக செஃப் அவதாரம் எடுத்தவர்களின் சமையல் சேனல்கள், ஆன்மீகப் பேச்சாளர்கள் என்று கலந்து கட்டி பார்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.   முதலில் கருத்தாளர்களின் செய்தி அப்டேட்டுகள். ஏற்கனவே பத்திரிக்கைகள், செய்திச் சேனல்கள், வாட்ஸ் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, சமூகம், விமர்சனம் | Leave a comment

ஆல் பாஸ்

நேற்றிலிருந்து பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் தொடர்பான பதிவுகளை கவனித்ததில் ஒரு விஷயம் புரிபட்டது. 90% மனிதர்கள் அப்பாடா என்று நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகையில் 10% பேர் விதவிதமாக வயற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர்.       கொரோனா புண்ணியத்தில் பாசானவர்கள் என்று சர்டிஃபிகேட்டில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தச் சொல்வது முதல் ஸ்டேட் ஃபர்ஸ்ட் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , , , , , | 1 Comment

ஆட்டிச நிலைக் குழந்தைகளும் வளர்ச்சிப் படிநிலைகளும்

வீட்டில் வயதான பெரியவர்கள் இருந்தால் பிறந்த குழந்தையின் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்துவிடுதல் தொடங்கி குளிக்க வைப்பது போன்ற செயல்களில் அவர்களின் ஈடுபாடும் ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும். அப்படியான சமயங்களில் குழந்தையின் கை, கால்கள், கண்கள் போன்றவற்றை ஆராய்வது, அதன் செயல்பாடுகளை அடிக்கடி சோதித்துப் பார்ப்பது என்றெல்லாம் செய்வார்கள். எங்கள் ஊர் பக்கமெல்லாம் ஒரு பழக்கம் … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம், கட்டுரை, சிறப்பியல்புக் குழந்தைகள் | Tagged , , , | 1 Comment