Category Archives: குழந்தை வளர்ப்பு

புது நெல்லின் பால்மணம் வீசும் புதிய வரவு

நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் கிளைகள் பரப்பி, மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் காலம். ஒவ்வொரு மலரும் ஒவ்வொருவிதமாகப் பூத்துக் கொண்டிருக்கிறது. சிறார்களுக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் விரும்பும் வகையில் கதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போல வயது வாரியாகவும் சிறார் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி, போன்ற நூல்களின் … Continue reading

Posted in அப்பா, இலக்கியம், குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், நாவல் | Leave a comment

கட்டணக் கொள்ளை

மருத்துவர் தி.சி. செல்வவிநாயகம், இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் அவர்களின் ஆட்டிச விழிப்புணர்வு செய்தி இது. எளிய மொழியில் ஆட்டிசத்தின் அறிகுறிகள், அதற்குத் தேவைப்படும் சிகிச்சை முறைகள், அரசு சார்பில் இலவசமாக தெரபிகள் கிடைக்குமிடம் போன்ற முக்கியமான தகவல்களைச் சொல்வதோடு இறுதியில் பெற்றோருக்கான நம்பிக்கையூட்டும் சொற்களோடு … Continue reading

Posted in அனுபவம், அரசியல், குழந்தை வளர்ப்பு, சமூகம், சிறப்பியல்புக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , | Leave a comment

கல்விப் புரட்சியாளர் – மரியா மாண்டிசோரி

மரியா மாண்டிசோரி(August 31, 1870 – May 6, 1952) உலகம் முழுவதிலும் மரபான கல்வி முறைகள் மனப்பாடத் திறனையும், அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்ற கொள்கையையும் மட்டுமே நம்பி செயல்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அந்நிலையில் கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலன்கள் வழியே குழந்தையின் அறிவுத் … Continue reading

Posted in அரசியல், கல்வி, குழந்தை வளர்ப்பு, மாண்டிசோரி | Tagged , , | 1 Comment

புத்தியுள்ள மனிதரெல்லாம்

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இவ்வரி பொதுவாக நல்லூழ், இறை ஆசி போன்றவற்றைக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால் மாணவப் பருவத்தில் இவ்வாறு நிகழ்வதற்கான முக்கியமான காரணியாக இருப்பது கற்றல் குறைபாடு. கல்வியில் பின் தங்கியிருக்கும் அனைத்துக் குழந்தைகளும் கற்றல் குறைபாடு உடையவர்கள் அல்ல. நிஜமாகவே நுண்ணறிவுத் திறன்(IQ) குறைவால் கல்வி கற்பதில் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கற்றல் குறைபாடு, குழந்தை வளர்ப்பு, செல்லமே, டிஸ்லெக்சியா | Tagged , , , , , | 3 Comments

ஆல் பாஸ்

நேற்றிலிருந்து பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் தொடர்பான பதிவுகளை கவனித்ததில் ஒரு விஷயம் புரிபட்டது. 90% மனிதர்கள் அப்பாடா என்று நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகையில் 10% பேர் விதவிதமாக வயற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர்.       கொரோனா புண்ணியத்தில் பாசானவர்கள் என்று சர்டிஃபிகேட்டில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தச் சொல்வது முதல் ஸ்டேட் ஃபர்ஸ்ட் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , , , , , | 1 Comment

சுவரின்றி சித்திரமில்லை

தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்று கண்டறிந்து, உறுதிப்படுத்தப்படும் நாளில் எல்லா பெற்றோரும் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாவர். சிலர் வாய்விட்டு அழலாம் இன்னும் சிலர் அழாமல் உறைந்துபோய் இருக்கலாம். ஆனால் எல்லாப் பெற்றோருக்கும் தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு குறைபாடு என்பதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மன அழுத்தம் என்பது தவிர்க்கமுடியாதது. அதனால்தான், … Continue reading

Posted in ஆட்டிசம், உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம், குழந்தை வளர்ப்பு, சிறப்பியல்புக் குழந்தைகள் | Tagged , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – வாத்தியக் குழு

கனி கடந்த சில வருடங்களாகவே பாவனை விளையாட்டுக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறான். குறிப்பாக வந்தே குருபரம்பரா கோஷ்டியினரின் பாடல்களை யூட்யூபில் பார்த்துவிட்டு தன்னை அந்தப் பாடகர்களின் இடத்தில் பொருத்திப் பார்த்து பாடிப் பார்ப்பதை ஆரம்பித்தான். அதிலும் ராகுல் தன்னை ஒத்தவன் என்று புரிவதால் அடிக்கடி நெஞ்சில் கை வைத்து, தன்னை ராகுல் வெள்ளல் என்றே சொல்லிக் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – படிச்சவன் பாட்டை கெடுத்த கதை

பெரும்பாலும் கனி ஒரு முறை கேட்டாலே பாடல்களை சரியாகக் கற்றுக் கொண்டு விடுவான். எப்போதாவது சில சமயம் குத்துமதிப்பாக சில வார்த்தைகளைப் புரிந்து கொண்டு பாடுவதும் உண்டு. ஆள் வளர வளர, அவனது மொழியறிவு வளர வளர தன் ஊகத்தால் இது போன்ற தவறுகளை கொஞ்சம் அதிகமாகச் செய்கிறானோ என்று எனக்கு ஒரு சந்தேகம். அதனால் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | Leave a comment

பூலோக குமாரி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம். சும்மா சொல்லல சுப்பிரமணி. தமிழ் தவிர ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தியின் அன்றைய வடிவமான இந்துஸ்தானி பாஷை என பன்மொழி வித்தகன் அவன். பாரதி எழுதிய இரண்டு சமஸ்கிருதப் பாடல்களில் ஒன்றான பூலோக குமாரி பாடல் இதோ கனியின் குரலில்…

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 42

கனி புதுவிதமான ஒரு பாட்டுக்குப் பாட்டு விளையாட்டை விளையாட விரும்புவான். அதாவது அவன் ஒரு பாட்டின் எந்த இடத்திலிருந்தும் ஏதேனும் ஒரு வரியைச் சொல்வான். உடனே அடுத்த அடியை நாம் சொல்ல வேண்டும். நமக்கு மூன்று வாய்ப்பு தருவான் – அதாவது மூன்று முறை அதே வரியைத் திரும்பத் திரும்பச் சொல்வான். பதில் வரவில்லை என்றால் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment