Tag Archives: ஆதங்கம்

’என் சரித்திரம்’ நூலில் உ வே சா தன் குருநாதரான மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நெகிழ்வுடனும், மட்டற்ற மரியாதையோடுமே விவரிப்பதைக் காணலாம். அவரிடம் தமிழ் கற்கச் சேர்ந்த சில நாட்களிலேயே ”உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா” என்று கேட்கிறார். “வீட்டில் என்னை சாமா என்று அழைப்பார்கள். சாமிநாதன் என்ற பெயரின் … Continue reading

Posted on by லக்ஷ்மி பாலகிருஷ்ணன் | 2 Comments

தேவி மகிமைகள்

மனுஷ்ய புத்திரனின் தேவி கவிதையை குறித்த என் எதிர் வினைகளின் தொகுப்பு ********* மனுஷ்யபுத்திரனின் தேவி கவிதையை அது அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான ஆதி பராசக்தியை குறித்து எழுதியது எனும் பட்சத்தில் மட்டுமே ஆதரிக்கிறேன். தெய்வ நிலையில் இருக்கும் தேவியைக் குறிக்கையில் மட்டுமே அது கவிதையாக இருக்கும். இப்போது பிரச்சனையான பின்னர் மனுஷ் ஜகா … Continue reading

Posted in அரசியல், இலக்கியம், எண்ணம், சமூகம், பெண்ணியம், மூட நம்பிக்கை, விமர்சனம் | Tagged , , , , | 1 Comment

பார்த்துப் பகிருங்கள்

கல்லூரி முடியும் நேரம் நெருங்க நெருங்க, புவனாவின் முகம் இறுக்கமாகிக் கொண்டிருந்தாலே அவள் தோழியருக்கு விஷயம் புரிந்துவிடும். “என்னடி! உங்க அணைக்கரை மாமா வந்திருக்காராக்கும்?” என்று கேட்டால், சங்கடமாக ‘ஆம்’  என்று தலையசைப்பாள். மிகவும் நெருங்கிய சொந்தக்காரர். அவள் மீது கொள்ளை அன்பும் அக்கறையும் உள்ளவரும் கூட! ஆனாலும் அவரது வருகை எப்போதும் புவனாவுக்கு எரிச்சலையே … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , | 3 Comments

உதிரிப்பூக்கள் ஆகஸ்ட் 16, 2011

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் பாடல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் மீண்டும் மனதில் பெரியாழ்வாரின் இந்த வரிகள்தான் வந்து மோதின. ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால் கொண்டு போவானோ’ என்ன ஒரு சோகம்… இதைப் படித்த போது ஜெயஸ்ரீயின் மரத்தடி கதை ஒன்றும் நினைவுக்கு வந்தது. ஆண்டாள் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், reliance mutual funds | Tagged , , | 1 Comment

உதிரிப் பூக்கள் 04-ஜூன் – 11

என்னதான் இந்த விஷயத்தைப் பற்றிப்  பேச வேண்டாம் என்று நினைத்தாலும் பாலா, மாசி போன்றவர்களே இதை நம்புகிறார்கள் போலத் தெரிவதால் என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்(யாருக்கும் அது ரொம்ப அவசியம் இல்லைன்னாலும் கூட 🙂 ) இவர் கருத்துச் சொல்ல மறுப்பதன் காரணமாக இங்கே காட்டுவது கனிமொழி பெண் என்பதால் ஏற்படும் இரக்கத்தை. ஆனால் … Continue reading

Posted in அனுபவம், அரசியல், உதிரிப்பூக்கள், எண்ணம் | Tagged , , , , | 1 Comment

முன்னுதாரணம்

மகாபாரதத்தில் ஒரு இடம். குக்ஷேத்திர யுத்தத்தில் கௌரவர்களின் சேனாதிபதியாக முதலில் பதவியேற்பவர் பீஷ்மர். அவரது தலைமையில் யுத்தம் நடந்தபோதுதான் அபிமன்யு கொல்லப்பட்டது போன்ற அதர்மங்கள் நடந்தன. அதன்பின் துரோணரும், அவருக்குப் பின் கிருபரும் சொற்பநாட்களுக்கு கௌரவ சேனாதிபதியானார்கள். அவர்களின் தலைமையின் கீழும் சில விதிமீறல்கள் நடக்கவே செய்தன. பாண்டவர்தரப்பில் 18 நாளுமேஅதர்மயுத்தம்தான். அதே சமயம் கிருபருக்குப் … Continue reading

Posted in அரசியல், எண்ணம், சமூகம் | Tagged , , | 1 Comment

இல்லத்தரசர்கள் ஏன் உருவாவதில்லை?

எழுத்தோ இசையோ சிற்பமோ கலை எதுவாயினும் கலைஞன் என்பவன் ஒரு விசேஷமான பிறவிதான். எந்தக் கலையும் மறையாத நுண்ணுர்வையும், தீராத படைப்பூக்கத்தையும் கோருவது. ஒரு மனிதன் கலையை ரசிக்கவே நுண்ணுர்வோடும், ரசனையோடும் அதற்கென தனிப்பட நேரம் செலவிடத் தயாராகவும் வேண்டுமென்றால் கலைஞன் அக்கலைப் படைப்புகளை படைக்க எவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருக்கும்? அப்படி தன் உணர்வுகளையும், … Continue reading

Posted in இலக்கியம், எண்ணம், கட்டுரை, சமூகம் | Tagged , , , , | 3 Comments

உதிரிப் பூக்கள் – 22 டிசம்பர், 2010

அரிச்சந்திர நாடகம் பார்த்துதான் காந்தி சத்தியசீலர் ஆனார் என்று சொல்வது நிஜம்தான் போலிருக்கிறது.  காதலனும் காதலியும் பேசிக் கொண்டே இருக்கும் போது திடீரென பத்து வெள்ளைக் கார ஆண்களும் பெண்களும் பின்னணியில் குத்தாட்டம் போடுவது மாதிரியான மரண மொக்கைப் படங்களை பார்த்துக் கூட நம் மக்கள் திருந்துகிறார்களாம்… நானொரு எம்.சி.பியாக்கும் என்று பெருமிதத்துடன் சொல்லித் திரிந்த, … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், உதிரிப்பூக்கள் | Tagged , , , , , , , | 4 Comments

புரிதல்!

(சிறுகதை) கல்யாணமான இந்த நான்கு வருடங் களில், நானூறு முறை கேட்ட வார்த்தைகள் தான் என்றாலும் கூட, முதல் தடவை போலவே, ஒவ்வொரு முறை அந்த வார்த்தை களைக் கேட்கும் போதும், மிளகாயை அரைத்துப் பூசினாற் போலத் தான் பானுவுக்கு எரிகிறது; இன்றும் எரிந்தது. ஏழரை மணிக்கு அலுவலக பஸ்சை பிடிப்பதற்கு முன்னரே காலைச் சிற்றுண்டி, … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , | 10 Comments

உதிரிப் பூக்கள்- 17 ஆகஸ்ட்- 2010

சிற்பக் கலைக்களஞ்சியமாய் அமைந்திருக்கும் கோவில்களைக் கொண்டாடி, மக்களுக்கு தன் எழுத்தின் வழியே அறிமுகப் படுத்தியவர், நிறைய பேருக்கு தமிழரின் பழம் பெருமை கொண்ட வாழ்வில் ஆர்வத்தை உண்டாக்கியவர் என்றால் அது கல்கிதான். ஆனால் அவர் சோழ, பல்லவ மன்னர்களின் கலை ஆர்வத்தையும், அவர்களின் ஆதரவில் உருவான கோவில்களின் சிறப்புகளையும் கொண்டாடியது போல தமிழகத்தின் பிற பகுதிகளில் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , , , , , | 5 Comments