Tag Archives: இசை

ஊர்ப்பாசம்

ஒருவரோடு நம்மை இணக்கமாக உணர ஏதேனும் ஒரு பொதுப் புள்ளி தேவையாகிறது. பள்ளி அளவிலான போட்டிகளில் நம் வகுப்புத் தோழர்களை ஆதரிக்கும் மனது, மாவட்ட அளவு போட்டிகளுக்குப் போகும்போது நம்மூர் என்கிற சரடுக்கே மயங்கிவிடும். தேசியப் போட்டிகளில் மொத்த தமிழ்நாட்டு வீரர்களும் நம்மாளாகி விட, சர்வதேசப் போட்டிகளிலோ வடக்கெல்லை குக்கிராமத்து வீரருக்கு கூட நாம் துள்ளிக் … Continue reading

Posted in அனுபவம், ஆனந்தவல்லி, இலக்கியம், ஜெயமோகன், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல் | Tagged , , , , , , | Leave a comment

மைத்ரீம் பஜத

1966ல் எம். எஸ் அம்மா ஐ.நா சபையில் பாடிய பாடல்களில் ஒன்று இப்பாடல். அந்நிகழ்வுக்காகவே இதை மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இயற்றித் தந்தார். புலனடக்கம்(தாம்ய), கொடை(தத்த), கருணை(தயத்வம்) – இம்மூன்றையும் முன்னிறுத்தும் பாடல் இது. கனியின் குரலில் இங்கே கேட்கலாம். https://youtu.be/dDbXOiAxXSI

Posted in ஆட்டிசம், இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , , , , , , , , , | Leave a comment

பூலோக குமாரி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம். சும்மா சொல்லல சுப்பிரமணி. தமிழ் தவிர ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தியின் அன்றைய வடிவமான இந்துஸ்தானி பாஷை என பன்மொழி வித்தகன் அவன். பாரதி எழுதிய இரண்டு சமஸ்கிருதப் பாடல்களில் ஒன்றான பூலோக குமாரி பாடல் இதோ கனியின் குரலில்…

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , | Leave a comment

சக்தி சகித கணபதிம்

நோட்டுஸ்வர வரிசையில் கனியின் அடுத்த முயற்சி. இந்தப் பாடலையும் தானாகவேதான் கற்றுக் கொண்டு வாசிக்கிறான். 🙂

Posted in கனி இசை | Tagged , , | Leave a comment

ராமபத்ர ராரா

நம் மாணிக்கவாசகரின் வரலாற்றோடு நிறைய ஒற்றுமைகள் கொண்டது பத்ராசலம் ராமதாசரின் வாழ்வு. கோபண்ணாவாக இருந்து ராமனுக்கு தாசராக மாறி பத்ராசலத்தில் கோவில் கட்டி, அதன் பொருட்டு 12 வருடம் சிறையில் வாடியவர். சிறையிருந்த போதும், பின்னரும் இவர் இயற்றிய பாடல்கள் ஏராளம். அதிலொன்று கனியின் குரலில்

Posted in இசை, கனி இசை | Tagged , , | Leave a comment

பாண்டுரங்க விட்டலனை பாடிடுவோம்

பொதுவாக பஜனைப் பாடல்களில் ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று நாமாவளிகளே அதிகம் இருக்கும். அதற்கான பெரிய சொற்களஞ்சியம் ஒன்று எல்லா மொழிகளிலும் உண்டு. கோபாலா என்று வருமிடத்தில் கோவிந்தா என்றாலும் சிக்கலிருக்காது. எனவே ஆற்றொழுக்கு போல எல்லோருமே பாடிவிட முடியும். ஆனால் விதிவிலக்காக சில பஜனைப் பாடல்களிளோ வரிகளை லாவகமாகப் பாட வேண்டியிருக்கும். அப்படியானதொரு பாடல் … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , , | Leave a comment

ஹரிவராசனம்

கனியை பாட வைத்து, அதை பதிவு செய்வதே ஒரு பெரிய சாகச முயற்சிதான். முழுப்பாடலையும் ஒரே ஒலி அளவில் பாட மாட்டான். மூச்சுப் பயிற்சி எதுவும் இல்லாததால் சீரான குரலில் பாட முடியாது. மூச்சிழுப்பதும் வெளி விடுவதும் பாட்டை அலையடிக்க வைக்கும். நடுவில் கொட்டாவி விடுவான். இதெதுவும் நடக்காவிட்டாலும் நடுவில் சில வார்த்தைகளை மனதுக்குள்ளேயே பாடிக்கொள்வான், … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , | Leave a comment

ஸாம்பசிவாயனவே – ஸ்வரஜதி – கமாஸ்

கமாஸ் ராகத்தில் அமைந்த ஸாம்பசிவாயனவே எனும் ஸ்வரஜதி இங்கே. இது கனி கற்றுக் கொண்ட இரண்டாவது ஸ்வரஜதி. பாடலைக் கற்றுக் கொண்டு பல மாதங்கள் ஆகிறது என்றாலும் இப்போதுதான் ஒழுங்காகத் தாளம் போட ஆரம்பித்திருக்கிறான்.

Posted in இசை, கனி இசை, ஸாம்பசிவாயனவே, ஸ்வரஜதி | Tagged , , , | Leave a comment

அம்மம்மா மாயம்மா அலமேலு மங்கம்மா

பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள் அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீ தேவி தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே. நவராத்திரி வெள்ளியான இன்று அன்னை அலர்மேல்மங்கையைப் போற்றிப் புகழும் பாடல் கனியின் குரலில் https://www.youtube.com/watch?v=rGAz_1SawxI

Posted in இசை, கனி இசை | Tagged , , | Leave a comment

தாரகாசுரன் சரிந்து – திருப்புகழ் – கனிவமுதன் – அக் 2, 2019

கனியை இசைப் பிரியன் எனலாம். அதே நேரம் தமிழ் வெறியன் என்றே சொல்லிவிடலாம். இந்தத் திருப்புகழை நான்கே வகுப்புகளில் கற்றுக் கொண்டு விட்டான்.

Posted in ஆட்டிசம், இசை, கனி இசை | Tagged , , | Leave a comment