Tag Archives: உதிரிப்பூக்கள்

உதிரிப்பூக்கள் – 10, செப் 2012

நேற்று டிவியில் குழந்தைகளுக்கான நாட்டிய போட்டி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். மனதில் பட்ட சில விஷயங்கள் இங்கே. 1. குழந்தைகளின் பெயர்கள் – அக்ஷயா, நிவாஷிகா, தேஜஸ்வினி, ரேஷ்மா. 2. ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே வயதுக்குகந்த வளர்ச்சியோடிருந்தாள். இரண்டு பெண்கள் எதிரில் நிற்பவர் ஊதினாலே ஒடிந்து விழுந்து விடுவார்களோ என்று பயப்படும்படி இருந்தார்கள். … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு | Tagged , | 2 Comments

உதிரிப்பூக்கள் ஆகஸ்ட் 16, 2011

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் பாடல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் மீண்டும் மனதில் பெரியாழ்வாரின் இந்த வரிகள்தான் வந்து மோதின. ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால் கொண்டு போவானோ’ என்ன ஒரு சோகம்… இதைப் படித்த போது ஜெயஸ்ரீயின் மரத்தடி கதை ஒன்றும் நினைவுக்கு வந்தது. ஆண்டாள் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், reliance mutual funds | Tagged , , | 1 Comment

உதிரிப் பூக்கள் 04-ஜூன் – 11

என்னதான் இந்த விஷயத்தைப் பற்றிப்  பேச வேண்டாம் என்று நினைத்தாலும் பாலா, மாசி போன்றவர்களே இதை நம்புகிறார்கள் போலத் தெரிவதால் என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்(யாருக்கும் அது ரொம்ப அவசியம் இல்லைன்னாலும் கூட 🙂 ) இவர் கருத்துச் சொல்ல மறுப்பதன் காரணமாக இங்கே காட்டுவது கனிமொழி பெண் என்பதால் ஏற்படும் இரக்கத்தை. ஆனால் … Continue reading

Posted in அனுபவம், அரசியல், உதிரிப்பூக்கள், எண்ணம் | Tagged , , , , | 1 Comment

உதிரிப் பூக்கள் – 13 பிப் 2011

இன்று கேணி கூட்டத்தில் இபா கலந்து கொண்டார். ஞானி பேசுகையில் பார்த்தசாரதியிடம் நான் அதிசயிக்கும் விஷயம் இன்றும் அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார் என்பதுதான் என்று சொன்னார். நிஜம்தான். டிவிட்டரிலும் இயங்குகிறாராம் இந்த இளைஞர். 🙂 பேசுகையில் அவர் நகுலன் என்ற துரைசாமி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ படிக்கையில் தன்னுடைய அறை … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கேணி | Tagged , , , , , , , | 6 Comments

உதிரிப்பூக்கள் 24 டிச, 2010

கனிவமுதனுக்கு சளித் தொந்தரவு தாங்க முடியவில்லை. ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் டாக்டரிடம் போய் விதவிதமான மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தாயிற்று. மருந்து கொடுத்த நான்காம் நாள் குறையும். பின் டோசேஜ் நிறுத்தியவுடன் மீண்டும் ஆரம்பிக்கும்.  ஒன்னேகால் வயதுக்கு அதிகமான ஆண்டி பயாட்டிக்ஸ் கொடுக்கிறோம் என்று தோன்றவே இப்போது கற்பூரவல்லியும், துளசியும் போட்டுக் கஷாயம், ஹிமாலாயாஸின் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு | Tagged , , , | 6 Comments

உதிரிப் பூக்கள் – 22 டிசம்பர், 2010

அரிச்சந்திர நாடகம் பார்த்துதான் காந்தி சத்தியசீலர் ஆனார் என்று சொல்வது நிஜம்தான் போலிருக்கிறது.  காதலனும் காதலியும் பேசிக் கொண்டே இருக்கும் போது திடீரென பத்து வெள்ளைக் கார ஆண்களும் பெண்களும் பின்னணியில் குத்தாட்டம் போடுவது மாதிரியான மரண மொக்கைப் படங்களை பார்த்துக் கூட நம் மக்கள் திருந்துகிறார்களாம்… நானொரு எம்.சி.பியாக்கும் என்று பெருமிதத்துடன் சொல்லித் திரிந்த, … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், உதிரிப்பூக்கள் | Tagged , , , , , , , | 4 Comments

உதிரிப் பூக்கள் – 4/09/10

ஜேபிஜே நிறுவனத்தைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட்காரர்கள் டிவியில் விளம்பரம் செய்வது நல்ல வழி என்று கண்டு கொண்டுவிட்டார்கள் போலும். அதிலும் விஜய் டிவியில் விளம்பரங்கள் சில வினாடிகள் – நிமிடங்கள் என்று இல்லாமல் மணிக் கணக்கில் வருகிறது. திண்டிவனம் தாண்டி மைலம் போகும் வழியில் ஏதோ ஒரு காஸ்மோபாலிட்டன் சிட்டியாம். அங்கே இல்லாத வசதி இந்த … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, பதிவர்கள் | Tagged , | 3 Comments

உதிரிப் பூக்கள்- 17 ஆகஸ்ட்- 2010

சிற்பக் கலைக்களஞ்சியமாய் அமைந்திருக்கும் கோவில்களைக் கொண்டாடி, மக்களுக்கு தன் எழுத்தின் வழியே அறிமுகப் படுத்தியவர், நிறைய பேருக்கு தமிழரின் பழம் பெருமை கொண்ட வாழ்வில் ஆர்வத்தை உண்டாக்கியவர் என்றால் அது கல்கிதான். ஆனால் அவர் சோழ, பல்லவ மன்னர்களின் கலை ஆர்வத்தையும், அவர்களின் ஆதரவில் உருவான கோவில்களின் சிறப்புகளையும் கொண்டாடியது போல தமிழகத்தின் பிற பகுதிகளில் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , , , , , | 5 Comments

உதிரி பூக்கள்- 16-ஆகஸ்ட்-2010

ஆன்மீகச் சொற்பொழிவு என்பது மேடைப் பேச்சில் ஒரு முக்கியமான பிரிவாகவே தமிழில் இருக்கிறது. வெட்டிப் பேச்சை கேட்க விருப்பமில்லாதவர்கள் கூட சாமி சமாச்சாரம் என்று வந்து உட்கார்வதால், அவர்களை பிடித்து இலக்கியச் சுவையையும் வெளித்தெரியாமல் ஊட்டி விடுவதாகவே ஒரு காலத்தில் இந்த சொற்பொழிவுகள் இருந்தன. வாரியார் போன்றவர்கள் கம்ப ராமாயணத்தையும், திருப்புகழையும், திருமுருகாற்றுப் படையையும் நிறைய … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், ஜால்ரா தொல்லை | Tagged , , | 3 Comments

உதிரிப் பூக்கள் – 25-ஜூலை-2010

விவில் சோப் விளம்பரத்தில் முன்பு டல் திவ்யாவை தூள் திவ்யாவாக திரிஷா கன்வர்ட் செய்தார். இப்போது திவ்யாவும் திரிஷாவும் சேர்ந்து சுமார் சுச்சி என்பவரை சூப்பர் சுச்சி ஆக மாற்றுவதாக அடுத்த பார்ட் எடுத்திருக்கிறார்கள். வசதியாக இப்பெண்கள் மருத்துவம் படிப்பதாக காண்பித்து விட்டதால் இன்னும் ஒரு சில தொடர் விளம்பரங்களை இதே ரீதியிலேயே தயாரித்துவிட முடியும். … Continue reading

Posted in உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு | Tagged , , | 6 Comments