Tag Archives: எழுத்தாளர்கள்

ஜீவன் உள்ள எழுத்து – மாலன் நாராயணன்

ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் -பாரதி புத்தகாலயம் -தொலைபேசி044-24332424 – விலை ரூ 230 வரலாற்று சாட்சியம்-1 “ ஒரு கிருகஸ்தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆபீசுக்குப் போயிருக்கிறான். அவன் சம்சாரம் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறாள்.அக்கம் பக்கம் யாருமில்லை. ஓர் ஆள் வந்து சீட்டு ஒன்றைக் கொடுத்தானாம். அதில், ’உன் புருஷன் சாகுந் தறுவாயில் … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், மராட்டிய மன்னர் வரலாறு, விமர்சனம் | Tagged , , , , , , , | 1 Comment

ஊர்ப்பாசம்

ஒருவரோடு நம்மை இணக்கமாக உணர ஏதேனும் ஒரு பொதுப் புள்ளி தேவையாகிறது. பள்ளி அளவிலான போட்டிகளில் நம் வகுப்புத் தோழர்களை ஆதரிக்கும் மனது, மாவட்ட அளவு போட்டிகளுக்குப் போகும்போது நம்மூர் என்கிற சரடுக்கே மயங்கிவிடும். தேசியப் போட்டிகளில் மொத்த தமிழ்நாட்டு வீரர்களும் நம்மாளாகி விட, சர்வதேசப் போட்டிகளிலோ வடக்கெல்லை குக்கிராமத்து வீரருக்கு கூட நாம் துள்ளிக் … Continue reading

Posted in அனுபவம், ஆனந்தவல்லி, இலக்கியம், ஜெயமோகன், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல் | Tagged , , , , , , | Leave a comment

ஜெயமோகனின் நூறு கதைகள் – 3

திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த கதைகள் இவ்வரிசையின் உச்சங்கள் என்றே சொல்லலாம். ராஜா கேசவதாஸ், வேலுத்தம்பி தளவாய் ஆகிய திவான்களின் வாழ்வை போழ்வு, இணைவு ஆகிய கதைகள் பேசுகின்றன. ஆயிரம் ஊற்றுக்கள், லட்சுமியும் பார்வதியும், மலையரசி போன்ற கதைகள் பத்மநாப சுவாமியின் கோவில் நிலவறைச் செல்வத்தைப் பற்றிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.   மந்திரவாதம் கற்றுக் கொள்பவர் … Continue reading

Posted in இலக்கியம், ஜெயமோகன், படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , , , | 3 Comments

ஜெயமோகனின் நூறு கதைகள் – 2

இந்தக் கதைகளின் வரிசையில் முதல் கதையும், கடைசிக் கதையும் தற்கொலை எண்ணத்தை மையப்படுத்தியவை.  கவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு, அரசியல் என பலதளங்களிலும் இயங்கிய எம்.கே எனும் மாமனிதரின் இறப்புக்குப் பின் அவர் கேரள அறிவியக்கத்தில் ஏற்படுத்திய புத்தெழுச்சியைப் பற்றியும், அவரது வாழ்வைப் பற்றியும் சில அறிவுஜீவிகள் கூடிப் பேசிக் கொள்ளும் உரையாடலாக ஆரம்பிக்கிறது அவரது முதல் … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, சிறுகதை, ஜெயமோகன், விமர்சனம் | Tagged , , , | 3 Comments

ஜெயமோகனின் நூறு கதைகள் – 1

கொரோனா காரணமாக எழுந்த ஊரடங்கு உத்தரவும், நோய் குறித்த அச்சமும் ஒரு சாராரை வீட்டுக்குள் முடக்கவும், இன்னொரு பக்கம் மக்களை பசியும் பட்டினியுமாக சாலைகளில் சாரை சாரையாக நடக்கவும் வைத்திருக்கிறது. இதில் வீதியில் விடப்பட்டோரின் வாழ்கை அவர்களின் கையில் இல்லை – அவர்களை நகர்த்திக் கொண்டு போகும் விதியின் வலிய கரங்களே அவர்களை என்ன செய்வதென்பதை … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, ஜெயமோகன் | Tagged , , , , , , | 3 Comments

உதிரிப்பூக்கள் 26, ஜூன் 2011

கனிவமுதனை மாலையில் ஒரு சின்ன நடை அழைத்துப் போனேன். தெருவில் இரண்டொரு வீடுகள் தள்ளி ஒரு ஃப்ளாட் உண்டு. அதன் கீழ் தளத்தில் கனியின் வயதொத்த மூன்று குழந்தைகளும் உண்டு. அங்கே போனதும் தோழர்களைப் பார்த்த கனி சத்யாக்ரகம் செய்யவே அங்கே உள்ளே நுழைது குழந்தைகளை விளையாட விட்டு விட்டு பெரியவர்கள் நாங்கள் ஓரமாய் நின்று … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கல்வி, குழந்தை வளர்ப்பு | Tagged , | 3 Comments

உதிரிப் பூக்கள் 04-ஜூன் – 11

என்னதான் இந்த விஷயத்தைப் பற்றிப்  பேச வேண்டாம் என்று நினைத்தாலும் பாலா, மாசி போன்றவர்களே இதை நம்புகிறார்கள் போலத் தெரிவதால் என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்(யாருக்கும் அது ரொம்ப அவசியம் இல்லைன்னாலும் கூட 🙂 ) இவர் கருத்துச் சொல்ல மறுப்பதன் காரணமாக இங்கே காட்டுவது கனிமொழி பெண் என்பதால் ஏற்படும் இரக்கத்தை. ஆனால் … Continue reading

Posted in அனுபவம், அரசியல், உதிரிப்பூக்கள், எண்ணம் | Tagged , , , , | 1 Comment

உதிரிப் பூக்கள் – 13 பிப் 2011

இன்று கேணி கூட்டத்தில் இபா கலந்து கொண்டார். ஞானி பேசுகையில் பார்த்தசாரதியிடம் நான் அதிசயிக்கும் விஷயம் இன்றும் அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார் என்பதுதான் என்று சொன்னார். நிஜம்தான். டிவிட்டரிலும் இயங்குகிறாராம் இந்த இளைஞர். 🙂 பேசுகையில் அவர் நகுலன் என்ற துரைசாமி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ படிக்கையில் தன்னுடைய அறை … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கேணி | Tagged , , , , , , , | 6 Comments

ஸ்திரீ- பாரதியார்

அது ‘ஸயன்ஸ்’ ஆயினும், பெண் விடுதலையாயினும் வேறெவ்வகை புதுமையேயாயினும், நம்மவர் அதனை ஒரு முறை கைக்கொள்வாராயின், பிறகு அதை மஹோன்னத நிலமைக்கு கொண்டு போய் விடுவார்கள். எனவே, நாம் – ஸ்திரீகளாகிய நாம் குருடாகிவிட்ட ஒருவன் தான் இழந்த பார்வையை மீட்டும் எய்தும் பொருட்டு எத்துணை பிரம்மாண்டமான த்யாகங்கள் செய்யத் ஒருப்படுவானோ, அத்துணை பெருந்தியாகங்கள் புரிய … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம் | Tagged , , , , , | 1 Comment

இல்லத்தரசர்கள் ஏன் உருவாவதில்லை?

எழுத்தோ இசையோ சிற்பமோ கலை எதுவாயினும் கலைஞன் என்பவன் ஒரு விசேஷமான பிறவிதான். எந்தக் கலையும் மறையாத நுண்ணுர்வையும், தீராத படைப்பூக்கத்தையும் கோருவது. ஒரு மனிதன் கலையை ரசிக்கவே நுண்ணுர்வோடும், ரசனையோடும் அதற்கென தனிப்பட நேரம் செலவிடத் தயாராகவும் வேண்டுமென்றால் கலைஞன் அக்கலைப் படைப்புகளை படைக்க எவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருக்கும்? அப்படி தன் உணர்வுகளையும், … Continue reading

Posted in இலக்கியம், எண்ணம், கட்டுரை, சமூகம் | Tagged , , , , | 3 Comments