Tag Archives: கனி இசை

பாற்கடல் வாசனைப் பாடிடுவோம்

மேலும்  ஒரு பஜனைப் பாடல் கனியின் குரலில்

Posted in ஆட்டிசம், இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , | Leave a comment

பாண்டுரங்க விட்டலனை பாடிடுவோம்

பொதுவாக பஜனைப் பாடல்களில் ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று நாமாவளிகளே அதிகம் இருக்கும். அதற்கான பெரிய சொற்களஞ்சியம் ஒன்று எல்லா மொழிகளிலும் உண்டு. கோபாலா என்று வருமிடத்தில் கோவிந்தா என்றாலும் சிக்கலிருக்காது. எனவே ஆற்றொழுக்கு போல எல்லோருமே பாடிவிட முடியும். ஆனால் விதிவிலக்காக சில பஜனைப் பாடல்களிளோ வரிகளை லாவகமாகப் பாட வேண்டியிருக்கும். அப்படியானதொரு பாடல் … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , , | Leave a comment

ஹரிவராசனம்

கனியை பாட வைத்து, அதை பதிவு செய்வதே ஒரு பெரிய சாகச முயற்சிதான். முழுப்பாடலையும் ஒரே ஒலி அளவில் பாட மாட்டான். மூச்சுப் பயிற்சி எதுவும் இல்லாததால் சீரான குரலில் பாட முடியாது. மூச்சிழுப்பதும் வெளி விடுவதும் பாட்டை அலையடிக்க வைக்கும். நடுவில் கொட்டாவி விடுவான். இதெதுவும் நடக்காவிட்டாலும் நடுவில் சில வார்த்தைகளை மனதுக்குள்ளேயே பாடிக்கொள்வான், … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , | Leave a comment

மாரி மலை முழைஞ்சில் – திருப்பாவை – பாடல் 23

கோதை தமிழ் ஐயைந்தும், ஐந்தும் (5 x 5 = 25 + 5) அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு. எனவே முப்பதையும் கனிக்கு சொல்லித் தந்துவிடத்தான் ஆசை. அதற்கு முதல் படியாக ஒரு பாடல் கனியின் குரலில் இங்கே.   மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , | Leave a comment

ஸாம்பசிவாயனவே – ஸ்வரஜதி – கமாஸ்

கமாஸ் ராகத்தில் அமைந்த ஸாம்பசிவாயனவே எனும் ஸ்வரஜதி இங்கே. இது கனி கற்றுக் கொண்ட இரண்டாவது ஸ்வரஜதி. பாடலைக் கற்றுக் கொண்டு பல மாதங்கள் ஆகிறது என்றாலும் இப்போதுதான் ஒழுங்காகத் தாளம் போட ஆரம்பித்திருக்கிறான்.

Posted in இசை, கனி இசை, ஸாம்பசிவாயனவே, ஸ்வரஜதி | Tagged , , , | Leave a comment

தேவாரம் – தலையே நீ வணங்காய், பூவினுக்கு அருங்கலம், வாழ்த்த வாயும்

பக்தி இலக்கியங்களில் சைவர்களுக்கு முதன்மையானதாகக் கருதப்படும் தேவாரம் தமிழிசைக்கும் முதன்மையான நூல். அதில் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்களில் மூன்றைக் கனி கற்றுக் கொண்டு பாடியுள்ளான். முதல் பாடலான திரு அங்க மாலை – சேக்கிழாரால் ’செல்கதி காட்டிடப் போற்றும் திரு அங்கமாலை’ என்றே சிறப்பித்துக் கூறப்பட்டது. அடுத்ததாகப் பாடப்பட்டிருக்கும் பூவினுக்கு அருங்கலம் என்று தொடங்கும் … Continue reading

Posted in கனி இசை, தேவாரம் | Tagged , , , , | Leave a comment

அம்மம்மா மாயம்மா அலமேலு மங்கம்மா

பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள் அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீ தேவி தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே. நவராத்திரி வெள்ளியான இன்று அன்னை அலர்மேல்மங்கையைப் போற்றிப் புகழும் பாடல் கனியின் குரலில் https://www.youtube.com/watch?v=rGAz_1SawxI

Posted in இசை, கனி இசை | Tagged , , | Leave a comment

தாரகாசுரன் சரிந்து – திருப்புகழ் – கனிவமுதன் – அக் 2, 2019

கனியை இசைப் பிரியன் எனலாம். அதே நேரம் தமிழ் வெறியன் என்றே சொல்லிவிடலாம். இந்தத் திருப்புகழை நான்கே வகுப்புகளில் கற்றுக் கொண்டு விட்டான்.

Posted in ஆட்டிசம், இசை, கனி இசை | Tagged , , | Leave a comment

ரார வேணு கோபாலா

கனி கேட்பதை ஒரு சிறு மாற்றமும் இல்லாது அப்படியே திருப்பி பாடுகிறவன். அதுவும் வினாடி சுத்தமாக பிரதியெடுப்பான் என்பதால் எப்போதும் தாளப் பிரச்சனை வந்ததே இல்லை எனலாம். ஆனால் முறையாக பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்த பின்னரும் நெடு நாட்கள் தாளமெதுவும் போடாமலே ஒப்பேற்றிக் கொண்டிருந்தான்.   முதலில் வகுப்புக்கு ஒழுங்காக இருந்தால் போதும் என்றும், … Continue reading

Posted in இசை, கனி இசை | Tagged , , | Leave a comment

இறைவனிடம் கையேந்துங்கள்

கனிக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று நாகூர் ஹனீபா பாடிய இறைவனிடம் கையேந்துங்கள். விரும்பிக் கேட்பான் என்பதால் பாடலை உள்ளூரக் கற்று வைத்திருப்பான் என்று தெரியும். எனவே சில வருடங்களுக்கு முன்பு ஆசிஃபிற்கு ரம்ஜான் வாழ்த்து சொல்வதற்காக வாய்ஸ் மெசேஜாக அனுப்ப எண்ணி பாடச் சொன்னேன். இடையிடையே சிரித்துக் கொண்டே முழுப் பாடலையும் பாடினான். அன்றோ அதற்கடுத்த … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , , | Leave a comment