Tag Archives: புத்தகம்

படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- நாவல்

முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்கு. அதில் ஒரு குடும்பம் எழவும் செய்யலாம், விழவும் செய்யலாம் என்பது முன்னோர்களின் கணிப்பு. நம் கண் முன்னால் தலையெடுத்து வளர்ந்து விடுபவர்கள் மேல் சிலருக்கு மதிப்பும், வியப்பும் தோன்றும். சிலருக்கோ பொறாமையும் … Continue reading

Posted in இலக்கியம், படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , , , , , | 3 Comments

படித்ததில் பிடித்தது (9)

புத்தகம்: சதுரங்கக் குதிரைஆசிரியர்: நாஞ்சில் நாடன்பதிப்பகம்: விஜயாநம் சமூக அமைப்பில் திருமணம் என்கிற அமைப்பு ஒரு அசைக்க முடியாத அங்கம். திருமணமில்லா வாழ்கையைத் தேர்ந்தெடுப்பது என்பது ரொம்பவே அபூர்வமாக நடக்கும் விஷயம். காரணம் கண்முண் வாழ்ந்த அனைவரும் சென்று பழகிய பாதை. பாதுகாப்பானது. அதிக ரிஸ்க் இல்லாத சௌகர்யமான வழி. அதே போல் திருமணம் வேண்டாம் … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 8 Comments

படித்ததில் பிடித்தது (8)

புத்தகம் – மூன்று விரல்ஆசிரியர் – இரா. முருகன்பதிப்பகம் – கிழக்குப் பதிப்பகம்முதல் பதிப்பு – ஆகஸ்ட், 2005 பொதுவாகவே எனக்கு இரா.முருகனின் எழுத்தில் விரவி நிற்கும் மெல்லிய அங்கதம் பிடிக்கும். அது அரசூர் வம்சம் நாவலானாலும் சரி, வாரபலன், எடின்பரோ குறிப்புகள் போன்ற பத்திகள் ஆனாலும் சரி அடிநாதமாக இந்த மெல்லிய நகைச்சுவை இழையோடும். … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 13 Comments

படித்ததில் பிடித்தது (7)

புத்தகம் – திரைகளுக்கு அப்பால்ஆசிரியர் – இந்திரா பார்த்தசாரதிமுதல் பதிப்பு – 1974சமீபத்திய பதிப்பு – ஜூலை, 2006.பதிப்பகம் – கிழக்கு இந்த நாவல் 1971ல் தினமணிக் கதிரில் தொடராக வந்து, பின் பாதியில் நிறுத்தப்பட்டது – காரணம் நம் கலாச்சாரக் காவலர்களின் கைங்கர்யம்தான். வழக்கமான இ.பாவின் அறிவுஜீவித்தனம் ததும்பும் பாத்திரங்கள் நிறைந்த இக்கதையில் அவர்களின் … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 2 Comments

படித்ததில் பிடித்தது (6)

சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தபடி அம்பையின் சிறகுகள் முறியும் சிறுகதை தொகுப்பைப் பற்றியதுதான் இந்த பதிவும். சிறகுகள் முறியும் என்ற கதை பொன்ஸின் பாஷையில் சொல்வதானால் சற்றே பெரிய கதை. எனவே என் வழக்கப்படி முழுக் கதையையும் இங்கே தட்டச்சு செய்ய முடியவில்லை. எனவே சில பகுதிகளை இங்கே உங்கள் முன் வைக்கிறேன். ஆண்கள் உடம்பெல்லாம் வயிறாக, … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 30 Comments

படித்ததில் பிடித்தது (5)

புத்தகம் – சிறகுகள் முறியும்ஆசிரியர் – அம்பை (சி.எஸ். லக்ஷ்மி)முதல் பதிப்பு – 1976சமீபத்திய பதிப்பு – டிசம்பர், 2003பதிப்பகம் – காலச்சுவடு ஆசிரியரைப் பற்றி:வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடீஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியும் கன்னடமும் அறிந்தவர். The Economic and Political Weekly, The Times of … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 6 Comments

படித்ததில் பிடித்தது (3)

புத்தகம் – அ’னா ஆவன்னாவகை – கவிதை தொகுப்புஆசிரியர் – நா. முத்துக்குமார்பதிப்பகம் – உயிர்மைமுதல் பதிப்பு – டிசம்பர், 2005 94 கவிதைகளை கொண்ட இந்த தொகுப்பு நூல் அளவில் சிறியது. அதன் பின்னட்டையிலிருக்கும் பதிப்புரை. வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும் சம்பவமும் ஒரு படம் போல நம்முடன் தங்கிவிடுகின்றன. மனித … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 7 Comments

படித்ததில் பிடித்தது (2)

புத்தகம் – ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டனஆசிரியர் – இந்திரா பார்த்தசாரதிவகை – குறு நாவல்வெளியான ஆண்டு – 1971 இப்போது மீள் பதிப்பாக கிழக்கு மூலம் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. கல்லூரி நாட்களில் எங்கள் மாவட்ட மைய நூலகத்தில் படித்த நூல். அநேகமாய் நான் படித்த இரண்டாவது இ.பா நாவல். முதன்முறையாக படித்தது – … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 25 Comments

படித்ததில் பிடித்தது (1)

படித்ததில் பிடித்தது அப்படிங்கற வரிசைல நான் எனக்கு பிடிச்ச சில புத்தகங்களை பற்றி எல்லோருடனும் பகிர்ந்துக்காலாம்னு ஒரு எண்ணம். (1) அப்படின்னு போட்டிருக்கறதில்லேயே தெரிஞ்சிருக்குமே, இது இன்னியோட முடியற தொல்லை இல்லை. இது தொடரும்….(இப்படி நான் போட்டு வச்சிருக்கற லிஸ்ட் கொஞ்சம் பெருசுதான். நானே மறந்துடுவேனேன்னு சில சமயம் நினைப்பேன். ஆனால் நம்மை விட அதை … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 18 Comments