Tag Archives: வாசிப்பு அனுபவம்

சீதைக்கு ராமன் சித்தப்பாவா?

கணிதத்தில் ஆரம்பப் பள்ளி அளவிலேயே கற்றுத் தரப்படும் ஒரு விஷயம் – இட மதிப்பு. ஒன்று, பத்து, நூறு என இலக்கங்களின் இடமதிப்பு புரிந்தால்தான் கூட்டல், கழித்தல் என அடிப்படைக் கணிதத்தையே கூட கற்க முடியும். அது போலவே வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல் என்பதும், வரலாற்று மனிதர்களை அவர்களின் காலகட்டத்திற்கேற்ப எடைபோட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். … Continue reading

Posted in அனுபவம் | Tagged , , , , , , , | 1 Comment

புதிரும் புத்தகமும்

நீங்கள் ஒரு படைப்பாளி என்று வைத்துக் கொள்வோம். ஒரு கவிதைப் புத்தகமோ கதைப் புத்தகமோ வெளியிடுகிறீர்கள். வெளியீட்டு விழா நிகழ்வு. அல்லது நீங்கள் ஒரு ஓவியர் எனில் உங்களது ஓவியங்களின் கண்காட்சி. அந்த நிகழ்வுக்கு எல் & டியின் ஜி.எம்மோ அல்லது கெவின்கேர் சி ஈ ஓவோ அல்லது ஒரு பெரிய திரைத்துறை பிரபலமோ வருகிறார் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , | Leave a comment

உதிரிப்பூக்கள் ஆகஸ்ட் 16, 2011

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் பாடல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் மீண்டும் மனதில் பெரியாழ்வாரின் இந்த வரிகள்தான் வந்து மோதின. ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால் கொண்டு போவானோ’ என்ன ஒரு சோகம்… இதைப் படித்த போது ஜெயஸ்ரீயின் மரத்தடி கதை ஒன்றும் நினைவுக்கு வந்தது. ஆண்டாள் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், reliance mutual funds | Tagged , , | 1 Comment

உதிரிப் பூக்கள் 04-ஜூன் – 11

என்னதான் இந்த விஷயத்தைப் பற்றிப்  பேச வேண்டாம் என்று நினைத்தாலும் பாலா, மாசி போன்றவர்களே இதை நம்புகிறார்கள் போலத் தெரிவதால் என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்(யாருக்கும் அது ரொம்ப அவசியம் இல்லைன்னாலும் கூட 🙂 ) இவர் கருத்துச் சொல்ல மறுப்பதன் காரணமாக இங்கே காட்டுவது கனிமொழி பெண் என்பதால் ஏற்படும் இரக்கத்தை. ஆனால் … Continue reading

Posted in அனுபவம், அரசியல், உதிரிப்பூக்கள், எண்ணம் | Tagged , , , , | 1 Comment

ஸ்திரீ- பாரதியார்

அது ‘ஸயன்ஸ்’ ஆயினும், பெண் விடுதலையாயினும் வேறெவ்வகை புதுமையேயாயினும், நம்மவர் அதனை ஒரு முறை கைக்கொள்வாராயின், பிறகு அதை மஹோன்னத நிலமைக்கு கொண்டு போய் விடுவார்கள். எனவே, நாம் – ஸ்திரீகளாகிய நாம் குருடாகிவிட்ட ஒருவன் தான் இழந்த பார்வையை மீட்டும் எய்தும் பொருட்டு எத்துணை பிரம்மாண்டமான த்யாகங்கள் செய்யத் ஒருப்படுவானோ, அத்துணை பெருந்தியாகங்கள் புரிய … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம் | Tagged , , , , , | 1 Comment

படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- நாவல்

முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்கு. அதில் ஒரு குடும்பம் எழவும் செய்யலாம், விழவும் செய்யலாம் என்பது முன்னோர்களின் கணிப்பு. நம் கண் முன்னால் தலையெடுத்து வளர்ந்து விடுபவர்கள் மேல் சிலருக்கு மதிப்பும், வியப்பும் தோன்றும். சிலருக்கோ பொறாமையும் … Continue reading

Posted in இலக்கியம், படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , , , , , | 3 Comments

படித்ததில் பிடித்தது (9)

புத்தகம்: சதுரங்கக் குதிரைஆசிரியர்: நாஞ்சில் நாடன்பதிப்பகம்: விஜயாநம் சமூக அமைப்பில் திருமணம் என்கிற அமைப்பு ஒரு அசைக்க முடியாத அங்கம். திருமணமில்லா வாழ்கையைத் தேர்ந்தெடுப்பது என்பது ரொம்பவே அபூர்வமாக நடக்கும் விஷயம். காரணம் கண்முண் வாழ்ந்த அனைவரும் சென்று பழகிய பாதை. பாதுகாப்பானது. அதிக ரிஸ்க் இல்லாத சௌகர்யமான வழி. அதே போல் திருமணம் வேண்டாம் … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 8 Comments

படித்ததில் பிடித்தது (8)

புத்தகம் – மூன்று விரல்ஆசிரியர் – இரா. முருகன்பதிப்பகம் – கிழக்குப் பதிப்பகம்முதல் பதிப்பு – ஆகஸ்ட், 2005 பொதுவாகவே எனக்கு இரா.முருகனின் எழுத்தில் விரவி நிற்கும் மெல்லிய அங்கதம் பிடிக்கும். அது அரசூர் வம்சம் நாவலானாலும் சரி, வாரபலன், எடின்பரோ குறிப்புகள் போன்ற பத்திகள் ஆனாலும் சரி அடிநாதமாக இந்த மெல்லிய நகைச்சுவை இழையோடும். … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 13 Comments

படித்ததில் பிடித்தது (7)

புத்தகம் – திரைகளுக்கு அப்பால்ஆசிரியர் – இந்திரா பார்த்தசாரதிமுதல் பதிப்பு – 1974சமீபத்திய பதிப்பு – ஜூலை, 2006.பதிப்பகம் – கிழக்கு இந்த நாவல் 1971ல் தினமணிக் கதிரில் தொடராக வந்து, பின் பாதியில் நிறுத்தப்பட்டது – காரணம் நம் கலாச்சாரக் காவலர்களின் கைங்கர்யம்தான். வழக்கமான இ.பாவின் அறிவுஜீவித்தனம் ததும்பும் பாத்திரங்கள் நிறைந்த இக்கதையில் அவர்களின் … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 2 Comments

படித்ததில் பிடித்தது (6)

சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தபடி அம்பையின் சிறகுகள் முறியும் சிறுகதை தொகுப்பைப் பற்றியதுதான் இந்த பதிவும். சிறகுகள் முறியும் என்ற கதை பொன்ஸின் பாஷையில் சொல்வதானால் சற்றே பெரிய கதை. எனவே என் வழக்கப்படி முழுக் கதையையும் இங்கே தட்டச்சு செய்ய முடியவில்லை. எனவே சில பகுதிகளை இங்கே உங்கள் முன் வைக்கிறேன். ஆண்கள் உடம்பெல்லாம் வயிறாக, … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 30 Comments